ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்: 20 வீரர்கள் காயம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 300 காளைகள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு இன்று விமரிசையாக நடந்தது. காளைகள் முட்டியதில் 20 வீரர்கள் காயம் அடைந்தனர். #Jallikattu
சீறிப்பாய்ந்த காளையின் திமிலை வீரர் இறுக்கிப்பிடித்து அடக்குவதையும், மற்றொரு வீரர் கீழே கிடப்பதையும் காணலாம்.
சீறிப்பாய்ந்த காளையின் திமிலை வீரர் இறுக்கிப்பிடித்து அடக்குவதையும், மற்றொரு வீரர் கீழே கிடப்பதையும் காணலாம்.
Published on

ஸ்ரீவில்லிபுத்தூர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கூமாபட்டியை அடுத்த நெடுங்குளத்தில், ஊர் சமுதாய மக்கள் சார்பில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

ஜல்லிக்கட்டில் 300 காளைகள் அவிழ்த்து விடப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தன. சந்திரபிரபா எம்.எல்.ஏ. ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார்.

வாடிவாசல் வழியே ஒவ்வொரு மாடாக அவிழ்த்து விடப்பட, அதனை 150-க்கும் மேற்பட்ட மாடு பிடி வீரர்கள் பாய்ந்து பிடித்தனர். சில காளைகள் சீறிப்பாய்ந்து வீரர்களை திக்குமுக்காடச் செய்தன.

இருப்பினும் வீரர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு காளைகளை மடக்கிப்பிடித்து பரிசுகளை வென்றனர். காளைகள் குத்தியதில் 20-க்கும் மேற்பட்ட வீரர்கள் காயம் அடைந்தனர். அவர்களுக்கு உடனடியாக சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.

ஜல்லிக்கட்டு நடைபெற்றதையொட்டி, போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com