7 வருட தடைக்குப்பின் போட்டி கிரிக்கெட்டில் களம் இறங்கிய ஸ்ரீசந்த்: ஒரு விக்கெட் வீழ்த்தினார்

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஸ்ரீசந்த் ஏழு ஆண்டுகளுக்குப்பின் போட்டி கிரிக்கெட்டில் களம் இறங்கி விளையாடினார்.
ஸ்ரீசந்த்
ஸ்ரீசந்த்
Published on

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசந்த். ஐபிஎல் தொடரில் விளையாடும்போது மேட்ச் பிக்சிங்சில் ஈடுபட்டதாக பிசிசிஐ ஆயுட்கால தடைவிதித்தது. பிசிசிஐ-யின் தடையை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அப்போது தண்டனைக்காலம் ஏழு ஆண்டாக குறைக்கப்பட்டது.

அவரது தடைக்காலம் முடிவடைந்ததையொட்டி உள்ளூர் போட்டிக்கான கேரள அணியில் சேர்க்கப்பட்டார். சையத் முஷ்டாக் டிராபி டி20 போட்டியில் கேரளா இன்று புதுச்சேரி அணியை எதிர்கொண்டது. இதில் ஸ்ரீசந்த் ஆடும் லெவன் அணியில் இடம் பிடித்தார். தொடக்க வீரர் ஃபபித் அகமதுவை க்ளீன் போல்டாக்கினார்.

4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். முதலில் பேட்டிங் செய்த புதுச்சேரி 138 ரன்கள் அடித்தது. பின்னர் கேரளா 18.2 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com