

சிட்னி:
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் 1 வீராங்கனையும், பெலாரசைச் சேர்ந்தவருமான அரினா சபலென்கா, ரஷிய வீராங்கனை அனஸ்டசியா உடன் மோதினார்.
இதில் சபலென்கா 6-2, 2-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதியில் அமெரிக்காவின் கோகோ காப் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
நாளை மறுதினம் நடைபெறும் அரையிறுதியில் சபலென்கா, ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசவை எதிர்கொள்கிறார்.