search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    உலக கோப்பை ஸ்குவாஷ்: அரையிறுதியில் இந்தியாவை வெளியேற்றியது மலேசியா
    X

    உலக கோப்பை ஸ்குவாஷ்: அரையிறுதியில் இந்தியாவை வெளியேற்றியது மலேசியா

    • இந்திய வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பாவை அயிரா ஆஸ்மேன் வென்றார்.
    • நாளை நடைபெறும் இறுதிச்சுற்றில் மலேசியா, எகிப்து அணி பலப்பரீட்சை நடத்த உள்ளன.

    சென்னை:

    சென்னையில் நடைபெற்று வரும் உலக கோப்பை ஸ்குவாஷ் போட்டியில், இரண்டாம் தரநிலையில் உள்ள இந்திய அணி சிறப்பாக விளையாடி அரையிறுதிக்கு முன்னேறியது. இன்று நடைபெற்ற அரையிறுதி சுற்றில் இந்திய அணி, மலேசியாவுடன் மோதியது.

    இதில் மலேசிய அணி 3-0 என இந்தியாவை வீழ்த்தியது. இந்திய வீரர் அபய் சிங்கை, மலேசிய வீரர் சாய் ஹங் 7-4, 5-7, 1-7, 7-1, 7-6 என்ற செட்கணக்கில் வீழ்த்தினார். இதேபோல் ஜோஸ்னா சின்னப்பாவை அயிரா ஆஸ்மேன் 7-3, 7-3, 5-7, 7-4 என்ற செட்கணக்கிலும், சவுரவ் கோசலை டேரன் பிரகாசம் 7-5, 2-7, 7-6, 6-5 என்ற செட்கணக்கிலும் வென்றனர். இதனால் மலேசிய அணி இறுதிசுற்றுக்கு முன்னேறியது.

    இதேபோல் மற்றொரு அரையிறுதி சுற்றில், நடப்பு சாம்பியனான எகிப்து அணி ஜப்பானை 4-0 என வீழ்த்தியது. நாளை நடைபெறும் இறுதிச்சுற்றில் மலேசியா, எகிப்து அணி பலப்பரீட்சை நடத்த உள்ளன.

    Next Story
    ×