என் மலர்
விளையாட்டு

தேசிய சப்-ஜூனியர் நெட்பால் போட்டி: தமிழக அணிகள் சாம்பியன்
- 27 மாநிலங்களைச் சேர்ந்த 54 அணிகள் இதில் பங்கேற்றன.
- தமிழக அணிகள் இரு பிரிவிலும் முதல் முறையாக ஒரே நேரத்தில் பட்டம் வென்று சாதித்தன.
சென்னை:
சென்னையை அடுத்த கவரப்பேட்டையில் உள்ள ஆர்.எம்.கே. பள்ளியில் 30-வது தேசிய சப்-ஜூனியர் நெட்பால் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 4 நாட்களாக லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் நடைபெற்றது. 27 மாநிலங்களைச் சேர்ந்த 54 அணிகள் இதில் பங்கேற்றன.
இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய 2 பிரிவிலும் தமிழக அணிகள் சாம்பியன் பட்டம் பெற்றன. இரு பிரிவிலும் முதல் முறையாக ஒரே நேரத்தில் பட்டம் வென்று சாதித்தன.
மகளிர் இறுதிப் போட்டி யில் லக்சனா சாய் எலமஞ்சி தலைமையிலான தமிழக அணி 17-14 என்ற கணக்கில் அசாமை வீழ்த்தி முதலிடத்தை பிடித் தது. தமிழக அணி தரப்பில் ரம்யா 10 கோல்கள் போட் டார். 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் கேரளா 24-22 என்ற கணக்கில் அரியா னாவை தோற்கடித்தது.
ஆண்கள் இறுதிப் போட்டியில் தமிழ்நாடு கேரள அணிகள் மோதின. 29-26 என்ற கணக்கில் கேரளாவை வீழ்த்தி சாம் பியன் பட்டம் பெற்றது. தெலுங்கானா 3-வது இடத்தை பிடித்தது.
பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக அணிகளுக்கு ஆர்.எம்.கே. கல்வி குழுமங்களின் தலைவர் ஆர்.எஸ்.முனி ரத்தினம் பரிசு கோப்பையை வழங்கினார்.
இந்திய நெட்பால் சம்மேளனத்தின் தலைவர் சுமன் கவுசிக், பொதுச்செயலாளர் விஜேந்தர் சிங், ஆர்.எம்.கே. கல்வி குழுமங்களின் துணைத் தலைவர்கள் ஆர்.எம்.கிஷோர், துர்கா தேவி பிரதீப், செயலாளர் எலமஞ்சி பிரதீப், பொருளாளர் சவுமியா, இயக்குனர் ஆர்.ஜோதி நாயுடு, தமிழ்நாடு நெட்பால் சங்க தலைவர் பி.செல்வராசு, ஆர்.எம்.கே. பள்ளி முதல்வர் ஷப்னா சங்க்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.






