search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன்: சாம்பியன் பட்டம் வென்றது சாத்விக்- சிராஜ் ஜோடி
    X

    இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன்: சாம்பியன் பட்டம் வென்றது சாத்விக்- சிராஜ் ஜோடி

    • ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிச்சுற்றுக்கான ஆட்டம் இன்று நடைபெற்றது.
    • இந்திய அணி மலேசிய உலக சாம்பியன் ஆரோன் சியா- சோ வூய் யிக் இணையை எதிர்கொண்டது.

    இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டி ஜகார்த்தாவில் உள்ள இஸ்டோராவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த இரட்டையர் பிரிவு அரையிறுதி போட்டியில் இந்தியாவின் சாத்விக் - சிராக் ஜோடி, தென் கொரியா கேங், சியோ ஜோடியுடன் போட்டியிட்டனர்.

    இந்த ஆட்டத்தில், தென் கொரியாவின் கேங், சியோ ஜோடியை 17-21, 21-19, 21-18 செட் கணக்கில் வீழ்த்தி இந்தியாவின் சாத்விக்- சிராக் ஜோடி வெற்றிப்பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

    இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிச்சுற்றுக்கான ஆட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி- சிராக் ஷெட்டி இணை மலேசிய உலக சாம்பியன் ஆரோன் சியா- சோ வூய் யிக் இணையை எதிர்கொண்டது.

    இந்த போட்டியில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாத்விக் சாய்ராஜ் - சிராஜ் ஷெட்டி இணை 21-17, 21-18 என்ற நேர் செட் கணக்கில் ஆரோன் சியா-சோ வூய்யிக் இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.

    Next Story
    ×