கொழும்பு டெஸ்ட்: 4-வது ஆட்ட முடிவில் நியூசிலாந்து 5 விக்கெட் இழப்பிற்கு 382- நாளை அற்புதம் நடக்குமா?

கொழும்பில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 382 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது.
டாம் லாதம் வாட்லிங்
டாம் லாதம் வாட்லிங்
Published on

கொழும்பு மைதானத்தில் மழைநீரை வெளியேற்றும் வசதி சிறப்பாக உள்ளதால், மழை நின்றதும் உடனடியாக ஆட்டம் தொடங்கப்பட்டது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இலங்கை அணி 3-வது நாள் ஆட்டத்தின்போது 244 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

பின்னர் நியூசிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தின்போது 4 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் அடித்திருந்தது.

இன்று 4-வது ஆட்டம் நடைபெற்றது. தொடக்க வீரர் டாம் லாதம் 154 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 6-வது விக்கெட்டுக்கு விக்கெட் கீப்பர் வாட்லிங் உடன் கிராண்ட்ஹோம் ஜோடி சேர்ந்தார். வாட்லிங் நிதானமாக விளையாட கிராண்ட்ஹோம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதனால் நியூசிலாந்து இன்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 382 ரன்கள் குவித்துள்ளது. வாட்லிங் 81 ரன்னுடனும், கிராண்ட்ஹோம் 75 பந்தில் 83 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

இலங்கை அணிக்கு 250 ரன்கள் வெற்றி நிர்ணயிக்கப்பட்டு இரண்டு செசன்களில் 10 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினால் நியூசிலாந்து வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய வாய்ப்புள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com