ஹெல்மெட்
ஹெல்மெட்

சீர்காழி புதிய பஸ் நிலையம் எதிரே தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு

சீர்காழி புதிய பஸ் நிலையம் எதிரே சீர்காழி காவல்துறை சார்பில் தலைக்கவசம், சீட்பெல்ட் அணிவது குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
Published on

சீர்காழி:

சீர்காழி புதிய பஸ் நிலையம் எதிரே சீர்காழி காவல்துறை சார்பில் தலைக்கவசம், சீட்பெல்ட் அணிவது குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமை தாங்கினார். போக்குவரத்து காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன், சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போலீஸ் துணை சூப்பிரண்டு யுவபிரியா விழிப்புணர்வு முகாமை தொடங்கி வைத்தார். விழாவில் எமன் வேடமிட்ட ஒருவர் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்தவரை எச்சரித்து அனுப்பும் சம்பவம் அனைவரையும் கவர செய்தது. நிகழ்ச்சியில் காவல்துறையினர், சமூக ஆர்வலர்கள், வாகன ஓட்டிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com