சோழவரத்தில் ரவுடி கொலையில் ஒருவர் கைது

சோழவரத்தில் ரவுடி கொலையில் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோழவரத்தில் ரவுடி கொலையில் ஒருவர் கைது
Published on

செங்குன்றம்:

வியாசர்பாடி, கக்கன்ஜி நகரைச் சேர்ந்தவர் திவாகர் (36) ரவுடி. கடந்த 30-ந்தேதி இரவு அவர் சோழவரம் ஏரிக்கரையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இது தொடர்பாக செங்குன்றத்தை அடுத்த பாலகணஷ் நகரைச் சேர்ந்த சுரேஷ் என்கிற பாபா சுரேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். நண்பரின் கொலைக்கு பழிக்கு பழியாக திவாகரை தீர்த்து கட்டியதாக கூறி உள்ளார். இந்த கொலை தொடர்பாக மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com