அனுமதி கிடைத்ததால் ருபெல் ஹொசைன் தென்ஆப்பிரிக்கா புறப்பட்டார்

குற்றவாளி ஐ.டி.யுடன் ஒத்துப்போனதால் தென்ஆப்பிரிக்கா செல்ல முடியாதல் தவித்த, ருபெல் ஹொசைன் தற்போது அனுமதி கிடைத்து புறப்பட்டுள்ளார்.
அனுமதி கிடைத்ததால் ருபெல் ஹொசைன் தென்ஆப்பிரிக்கா புறப்பட்டார்
Published on

இதுகுறித்து வங்காள தேச கிரிக்கெட் வாரியம் தென்ஆப்பிரிக்க அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டது. அப்போது, ருபெல் ஹொசைன் மீது குற்றப் பிண்ணனி உள்ளதாக கூறி, அவரது போட்டோ மற்றும் அனைத்து விவரத்தையும் தெரிவித்தது.

அந்த புகைப்படத்தை பார்த்த வங்காள தேச கிரிக்கெட் வாரியம், படத்தில் இருந்தவரின் பிறந்த தேதி விவரங்கள் அனைத்தும் ருபெல் ஹொசைன் விவரத்துடன் ஒத்திருந்தைதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து வங்காள தேச கிரிக்கெட் வாரியம் தெளிவாக தென்ஆப்பிரிக்க அதிகாரிகளுக்கு எடுத்துக் கூறினார்கள். அப்போது ருபெல் ஹொசைன் வேறு நபர். படத்தில் இருப்பவர் வேறு நபர் என்பதை தெளிவுப்படுத்தியது.

இதனால் ருபெல் ஹொசைனுக்கு தென்ஆப்பிரிக்கா செல்ல அனுமதி கிடைத்தது. இதனைத் தொடர்ந்து ருபெல் ஹொசைன் தென்ஆப்பிரிக்கா புறப்பட்டார். 28-ந்தேதி தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் ருபெல் ஹொசைன் விளையாட இருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com