குடியாத்தத்தில் பறக்கும் படை சோதனையில் ரூ.4 லட்சம் பறிமுதல்

குடியாத்தத்தில் லாரிகளில் கொண்டு வந்த ரூ.4 லட்சம் பணத்தை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பணம் பறிமுதல்
பணம் பறிமுதல்
Published on

குடியாத்தம்:

வேலூர் பாராளுமன்ற தேர்தலையொட்டி 74 பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

குடியாத்தம் பாக்கம் பகுதியில் கூடுதல் பறக்கும்படை அதிகாரி வேல்முருகன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்கரவர்த்தி ஆகியோர் இன்று கால சோதனை நடத்தினர்.

அப்போது சித்தூரில் இருந்து வந்த லாரியை மடக்கினர். கரூர் மாவட்டம் வெள்ளியணை பகுதியை சேர்ந்த டிரைவர் கணேசன் (வயது 45). ஓட்டி வந்தார். அவரிடம் ஆவணம் இல்லாத ரூ.3 லட்சத்து 10 ஆயிரம் இருந்தது.

பரதராமியில் பிளாஸ்டிக் சேர்கள் இறக்கிவிட்டு அதற்கான பணத்தை கொண்டு வந்ததாக தெரிவித்தார். பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்தனர்.

குடியாத்தம்-வேலூர் மெயின் ரோட்டில் வேப்பூரில் பறக்கும்படை அதிகாரி சாமிநாதன், சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகியோர் சோதனை நடத்தினர்.

வேலூரில் வந்த மினி லாரியை மடக்கினர். அதில் வந்த அரக்கோணம் வியாபாரி யூனிஷ் (37) என்பவரிடம் ரூ.89 ஆயிரத்து 500 இருந்தது அவர் வி.கோட்டா பகுதிக்கு தக்காளி வாங்க செல்வதாக தெரிவித்தார். உரிய ஆவணம் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யபட்ட பணம் தாசில்தார் சாந்தியிடம் ஒப்படைக்கபட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com