காஞ்சீபுரம் மாவட்டத்தில் இருந்து ரூ.1¼ கோடி நிவாரண பொருட்கள்- கலெக்டர் தகவல்

கஜா புயல் பாதித்த இடங்களுக்கு காஞ்சீபுரம் மாவட்டத்தில் இருந்து ரூ.1¼ கோடி நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. #GajaCyclone
காஞ்சீபுரம் மாவட்டத்தில் இருந்து ரூ.1¼ கோடி நிவாரண பொருட்கள்- கலெக்டர் தகவல்
Published on

காஞ்சீபுரம்:

கஜா புயலில் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு காஞ்சீபுரம் மாவட்டத்தில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.

நேற்று காஞ்சீபுரம் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 25 வகையான பொருட்களை ரூ.2.26 லட்சம் மதிப்பிலான பொருட்களை மாவட்ட கலெக்டர் பொன்னையா கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

இதே போல் மாவட்ட கருங்கல் குவாரி ஒப்பந்ததாரர்கள் சார்பில், 1008 குடும்பங்களுக்கு தேவையான 7 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய பெட்டகத்தை கலெக்டரிடம் ஒப்படைத்தனர்.

இது குறித்து கலெக்டர் பொன்னையா கூறும்போது, “காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்துதுறைகளின் சார்பில் இதுவரை கஜா புயலில் பாதிக்கப்பட்ட மாவட்ட மக்களுக்கு 1 கோடியே 26 லட்ச மதிப்பிலான பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன” என்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி, மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, திட்ட இயக்குனர் ஜெயகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) நாராயணன், பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் சிவசங்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். #GajaCyclone

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com