

லக்னோ:
12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் உபி மாநிலத்தில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் புனேரி பல்டன் அணியும், யு மும்பா அணியும் மோதின.
ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே மும்பை அணி சிறப்பாக விளையாடியது. இதனால் முதல் பாதியில் அந்த அணி 19 - 10 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியிலும் மும்பை அணி அபாரமாக ஆடியது.
இறுதியில், புனே அணியை 31 - 22 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றி பெற்றது. இது மும்பை அணிக்கு கிடைத்த ஆறாவது வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது. #ProKabaddi