கோபி அருகே விவசாயியை இரும்பு கம்பியால் தாக்கி மிரட்டிய பூசாரி கைது

கோபி அருகே பணியில் இருந்து நிறுத்தப்பட்ட ஆத்திரத்தில் விவசாயியை இரும்பு கம்பியால் தாக்கிய பூசாரியை போலீசார் கைது செய்தனர்.
கோபி அருகே விவசாயியை இரும்பு கம்பியால் தாக்கி மிரட்டிய பூசாரி கைது
Published on

கோபி:

கோபி அருகே உள்ள கரட்டடிபாளையத்தை சேர்ந்தவர் லோகநாதன். இவர் அந்த பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் பூசாரியாக பணிபுரிந்தார்.

திடீரென அவர் பணியில் இருந்து நிறுத்தப்பட்டார். இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி லோகநாதனின் வீட்டருகே வசிக்கும் விவசாயியான ஈஸ்வரமூர்த்தி (வயது 57) என்பவர் அந்த பகுதியில் நின்று பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது லோகநாதன் அங்கு வந்தார். அவர் ஈஸ்வரமூர்த்தியிடம் தகராறில் ஈடுபட்டார். ‘‘உன்னால்தான் எனது வேலை போனது. இப்போது வருமானம் இல்லாமல் இருக்கிறேன்’’ என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம்.

பின்னர் ஈஸ்வரமூர்த்தியை மிரட்டி அவர் வைத்திருந்த ரூ. 500 பணத்தை பறித்தார். மேலும் அங்கு கிடந்த இரும்பு கம்பியை எடுத்து ஈஸ்வரமூர்த்தியை தாக்கினார்.

இது குறித்து கோபி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து லோகநாதனை கைது செய்தனர்.

பின்னர் அவர் கோபி முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி பாரதி பிரபா உத்தரவிட்டார். இதையடுத்து லோகநாதன் கோபி ஜெயிலில் அடைக்கப்பட்டார். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com