பூண்டி ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் திறப்பு

பூண்டி ஏரியில் இருந்து சென்னைக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. #Poondilake #Lake
பூண்டி ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் திறப்பு
Published on

ஊத்துக்கோட்டை:

கிருஷ்ணா நதி நீர் திட்டத்தின் படி கண்டலேறு அணையிலிருந்து கடந்த 22-ந் தேதி பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

தொடக்கத்தில் வினாடிக்கு 200 கனஅடி திறக்கப்பட்ட தண்ணீர் பின்னர் 300 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. தற்போது வினாடிக்கு 1200 கன அடியாக திறக்கப்படுகிறது.

இந்த தண்ணீர் கடந்த 29-ந் தேதி பூண்டி ஏரிக்கு வந்தடைந்தது. பூண்டி ஏரியில் 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி 146 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 620 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் சென்னை குடிநீருக்கு பேபி கால்வாயில் தண்ணீர் திறந்துவிடும் படி சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் பொதுப் பணித்துறை அதிகாரிகளை கேட்டு கொண்டனர்.

அதன் படி நேற்று மாலை பூண்டி ஏரியில் இருந்து பேபி கால்வாயில் 20 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதில் பொதுப் பணித்துறை முதன்மை பொறியாளர் ஜெயராமன், செயற் பொறியாளர் விஜயகுமார், உதவி பொறியாளர் ரமேஷ், பொறியாளர் சந்திரகுமார் மற்றும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் பங்கேற்றனர். அவர்கள் மலர் தூவி தண்ணீரை திறந்து வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com