தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வானவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான 45 ஆசிரியர்களை இன்று சந்தித்த பிரதமர் மோடி அவர்களுக்கு தனது பாராட்டுகளை தெரிவித்ததோடு, சிறிது நேரம் கலந்துரையாடினார். #PMModi #NationalTeachersAward #TeachersDay
தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வானவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்
Published on

புதுடெல்லி:

சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான, செப்டம்பர் 5-ஆம் தேதி, ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டெல்லியில் நாளை நடைபெறும் விழாவில் கல்வித் துறையில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகளை துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு வழங்கவுள்ளார். 

இதற்கு முன்னர், நாடு முழுவதும் 300-க்கும் அதிகமான ஆசிரியர்களுக்கு தேசிய விருது வழங்கப்பட்டு வந்த நிலையில், அந்த விருதின் முக்கியத்துவம் கருதி, தற்போது ஆண்டுக்கு 45 ஆசிரியர்களுக்கு மட்டுமே விருது வழங்கப்படுகிறது. தமிழகத்தின் கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டியைச் சேர்ந்த அரசு தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் ஆர்.சதியும் இந்த விருதுக்கு தேர்வாகியுள்ளார்.

இந்நிலையில், விருதுக்கு தேர்வான 45 ஆசிரியர்களை இன்று சந்தித்த பிரதமர் மோடி, அவர்களுக்கு தனது பாராட்டுகளை தெரிவித்துக்கொண்டார். மேலும், அவர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார். இந்த சந்திப்பின் போது, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகரும் உடனிருந்தார். 

X

Maalai Malar
www.maalaimalar.com