

கடந்த சில நாட்களாக கேரளா மற்றும் தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் முல்லைப்பெரியாறு, வைகை அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் வேகமாக உயர தொடங்கி உள்ளது.
கடந்த 5 நாட்களுக்கு முன்பு 127 அடியாக இருந்த பெரியாறு அணை நீர்மட்டம் தற்போது 132 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு 3474 கனஅடி நீர் வருகிறது. அணையில் இருந்து 1550 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.
கோப்புப்படம்
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 46.50 அடியாக உள்ளது. 37 கன அடி நீர் வருகிறது. நீர் திறப்பு இல்லை.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.37 அடியாக உள்ளது. 26 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
பெரியாறு 1, தேக்கடி 7, வைகை அணை 3.6, மஞ்சளாறு 1, சோத்துப்பாறை 3 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.