அந்தியூர் அருகே பஞ்சாயத்து தலைவர் கொலை - 7 ஆண்டுக்கு பிறகு நடந்த பழிக்கு பழி சம்பவம்

அந்தியூர் அருகே பஞ்சாயத்து தலைவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளது.
பஞ்சாயத்து தலைவர்
பஞ்சாயத்து தலைவர்
Published on

அந்தியூர்:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள சங்கராபாளையம் பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சின்னதங்கம் என்கிற ராதாகிருஷ்ணன் (வயது 48) அ.தி.மு.க பிரமுகர்.

நேற்று காலை ராதாகிருஷ்ணன் அந்தியூர் அருகே செல்லப்பபாளையம் பகுதியில் நின்று கொண்டிருந்த போது அங்கு காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் பஞ்சாயத்து தலைவர் ராதாகிருஷ்ணன் அரிவாளால் வெட்டி கொலை செய்தனர்.

பிறகு அந்த கும்பல் காரில் ஏறி தப்பி ஓடினர். கொலையாளிகளை உடனே பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவு படி போலீசார் உஷார் படுத்தப்பட்டனர்.

இதையொட்டி கவுந்தப்பாடி அருகே வந்த காரை போலீசார் விரட்டினர். காரில் இருந்து இறங்கி தப்பி ஓடிய 4 பேரை போலீசார் பிடித்தனர்.

கைதான 4 பேரும் சென்னை பல்லாவரத்தை சேர்ந்த கூலிப்படையினர் என திடுக்கிடும் தகவல் தெரிந்தது.

கூலிப்படையை சேர்ந்த சரவணன், பாலமுருகன், ராஜேஷ் மற்றும் சிவா ஆகிய 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் பஞ்சாயத்து தலைவர் ராதாகிருஷ்ணன் கொலையில் திடுக் தகவல் கிடைத்து உள்ளது. பழிக்கு பழியாக இந்த கொலை நடந்துள்ளது என போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

அந்தியூர் அருகே கடந்த 2013-ம் ஆண்டில் ரியல் எஸ்டேட் பிரச்சினையில் சேகர் என்பவர் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வழக்கு ராதாகிருஷ்ணன் மீது இருந்தது.

இதந்கு பழிக்கு பழி வாங்க அவரது மகன் அரவிந்த் என்பவர் 7 ஆண்டுகளுக்கு பிறகு கூலிப்படையை ஏவி ராதாகிருஷ்ணனை கொலை செய்தது. போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் பஞ்சாயத்து தலைவரை கொல்ல சென்னை கூலிப்படைக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்திற்பதும் விசாரணையில் தெரியவந்தது.

போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com