பாடியில் பள்ளி மாணவி திடீர் தற்கொலை

பாடியில் பள்ளி மாணவி திடீர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாடியில் பள்ளி மாணவி திடீர் தற்கொலை
Published on

வில்லிவாக்கம், ஆக. 30-

பாடி எம்.டி.எச். சாலை யில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ரவிக்குமார். இவரது மகள் அனந்த சீதா (13). முகப்பேரில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று இரவு அனந்த சீதா தனது அறையை பூட்டி கொண்டு மின் விசிறியில் தூக்குப் போட்டு தொங் கினார்.

அதிர்ச்சி அடைந்த பெற் றோர் கதவை உடைத்து மாணவியை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரி சோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து ரவிக்குமார் போலீசில் புகார் செய்தார். அதில் தனது மகள் கடந்த 3 நாட்களாக யாரிடமும் சரியாக பேசவில்லை என்றும் மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறியுள்ளார். அதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com