இரண்டுகட்ட சோதனைகளிலும் வெற்றி - ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் சோதனை வெற்றி பெற்றதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கொரோனா வைரஸ் பரிசோதனை
கொரோனா வைரஸ் பரிசோதனை
Published on

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள தடுப்பூசி இறுதி கட்டத்தை எட்டியதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் சோதனை வெற்றி பெற்றதாக தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக 1077 நபர்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டதில் அவர்களுக்கு கொரோனா எதிர்ப்பு ஆற்றல் கிடைத்திருப்பது சோதனையில் உறுதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1077 நபர்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டதில் அவர்களுக்கு கொரோனா எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன்   டி-செல்களையும் (வெறும் தடுப்பூசி மட்டும் செலுத்தும் போது சில மாதங்களுக்கு மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும். ஆனால் கில்லர் டி-செல்கள் ஆண்டுக்கணக்கில் உடலில் நீடிக்கக் கூடியது) உருவாக்கியுள்ளது என்பது சோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 3-ம் கட்ட பரிசோதனையில் அதிகமானோர் பரிசோதனையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திடம் பிரிட்டன் ஆர்டர் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com