ஓச்சேரி அருகே ஏற்பட்ட விபத்து தொடர்பாக லாரி டிரைவர் கைது

ஓச்சேரி அருகே ஏற்பட்ட விபத்து தொடர்பாக லாரி டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

காவேரிப்பாக்கம்:

ஓச்சேரியை அடுத்த சித்தஞ்சி அருகே கடந்த 19-ந் தேதி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினிவேன் தேசிய நெடுஞ்சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஆனந்தி (40) என்ற பெண் மினிவேனிலிருந்து கீழே விழுந்தார். அதேசமயம் பின்னால் வந்த கண்டெய்னர் லாரி ஆனந்தி தலைமீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து அவளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் நெல்லை மாவட்டம் வள்ளியூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த கோவிந்தராஜ் (35) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com