துணைக் கேப்டனாக நியமித்தது மிகப்பெரிய கவுரவம்: இங்கிலாந்து பேட்ஸ்மேன் சாம் பில்லிங்ஸ்

நியூசிலாந்து தொடருக்கான இங்கிலாந்து அணியின் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டது மிகப்பெரிய கவுரவம் என சாம் பில்லிங்ஸ் தெரிவித்துள்ளார்.
சாம் பில்லிங்ஸ்
சாம் பில்லிங்ஸ்
Published on

இங்கிலாந்து அணி நியூசிலாந்து சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதற்கான இங்கிலாந்து அணியின் துணைக் கேப்டனாக சாம் பில்லிங்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

தோள்பட்டை காயத்தால் கடந்த ஐந்து மாதங்களுக்கு அணியில் இடம் பெறாமல் இருந்து பில்லிங்ஸ் தற்போது அணிக்கு திரும்பியுள்ளார். துணைக் கேப்டன் பதவி வழங்கப்பட்டது மிகப்பெரிய கவுரவம் என பில்லிங்ஸ் தெரிவித்துள்ளார்.

சாம் பில்லிங்ஸ் இதுகுறித்து கூறுகையில் ‘‘இது போன்ற அங்கீகாரம் மிகப்பெரிய கவுரவம். ஒரு தலைவராக பெயர் எடுக்க எனக்கு கிடைத்த வாய்ப்பு. கடந்த குளிர்கால சீசனில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்துள்ளேன். என்னுடைய கவுன்ட்டி அணியான லயன்ஸில் கேப்டனாக உள்ளேன்’’ என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com