ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் நிர்மலாதேவி இன்று ஆஜர்

மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரத்தில் கைதான நிர்மலா தேவி இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். #NirmalaDevi
ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் நிர்மலாதேவி இன்று ஆஜர்
Published on

ஸ்ரீவில்லிபுத்தூர்:

அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி உதவி பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகள் சிலரிடம் பாலியல் பேரத்தில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

நிர்மலாதேவி, பல்கலைக் கழக பேராசிரியர் முருகன், கருப்பசாமி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிர் விரைவு கோர்ட்டில் நடந்து வருகிறது. வழக்கை திறந்த நீதிமன்றத்தில் நடத்தக்கூடாது. ரகசியமாக விசாரணை நடத்த வேண்டும் என்று சி.பி.சி.ஐ.டி. தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

கருப்பசாமி, முருகன் தரப்பில் வழக்கை திறந்த நீதிமன்றத்தில் நடத்த வேண்டுமென்று மனு செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று நீதிபதி லியாகத் அலி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நிர்மலாதேவி, பேராசிரியர், முருகன், கருப்பசாமி ஆகியோர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. #NirmalaDevi

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com