நெய்வேலி அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து- 7 பேர் படுகாயம்

நெய்வேலி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்ததில் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

நெய்வேலி:

தமிழகம், ஆந்திரா, கேரளா, உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் மின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக நெய்வேயில் அனல் மின் நிலையம் செயல்பட்டு வருகிறது.

நெய்வேலி அனல்மின் நிலையத்தின் இரண்டாவது அளகில் இன்று பாய்லர் வெடித்தது. இதில் 7 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் சிலர் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதை அடுத்து அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

பாய்லர் வெடித்ததால் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்புதுறை வீரர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com