என்ன செய்தாலும் உடையாது, ஸ்மார்ட்போன்களை பாதுகாக்கும் புதிய 'கவசம்' கண்டுபிடிப்பு

ஸ்மார்ட்போன்களை உடையாமல் பார்த்து கொள்ளும் மலிவு விலை, எடை குறைந்த, கவசத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது ஸ்மார்ட்போன் மட்டுமின்றி பல்வேறு இதர சாதனங்களிலும் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்ன செய்தாலும் உடையாது, ஸ்மார்ட்போன்களை பாதுகாக்கும் புதிய 'கவசம்' கண்டுபிடிப்பு
Published on

லண்டன்:

ஸ்மார்ட்போன்களை வாங்கி ஒரு வாரமாவது தவறி கீழே விழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதே பலரின் கனவாக இருக்கிறது. இதற்காகவே பலரும் ஸ்மார்ட்போனுடன், அதை பாதுகாக்கும் பேக் கவர் ஒன்றையும் வாங்குகின்றனர். 

எவ்வாறான பாதுகாப்பு கவசங்கள் பொருத்தினாலும், கையில் இருந்து நழுவி கீழே விழும் போது அதன் திரை அல்லது மற்ற பாகங்களில் கீறல்கள் ஏற்படும். நாள்பட சிறு கீறல்கள் ஸ்மார்ட்போன்களை உடைத்து விடுகின்றன. பல ஆயிரங்களை செலவு செய்து வாங்கும் ஸ்மார்ட்போன்கள், சில வாரங்களில் உடைந்து போவது பலருக்கும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது.   

ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரின் நீண்ட நாள் தொல்லைக்கு ஐயர்லாந்தின் குயின்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் புதிய விடை கண்டுள்ளனர். எல்டன் சான்டோஸ் தலைமையிலான ஆய்வு குழுவினர் கண்டறிந்துள்ள புதிய வகை கவசம் ஸ்மார்ட்போன் போன்ற சாதனங்களை உடையாமல் பார்த்து கொள்ளும். 

மலிவு விலையில், எடை குறைவானதாக இருக்கும் புதிய வகை கவசம் செமிகன்டெக்டர் ஆலைகளில் அதிகளவு தயாரிக்க முடியும். சிலிகான் போன்ற இயற்பியல் அம்சங்கள் கொண்ட புதிய கவசத்தை ஆராய்ச்சியாளர்கள் 'மிராக்கிள் மெட்டீரியல்' (miracle material) என அழைக்கின்றனர். எனினும் இது சிலிகானை விடை மேம்படுத்தப்பட்ட இரசாயன தரம், குறைந்த எடை மற்றும் நெகிழும் தன்மை கொண்டதாகும். 

புதிய கவசம் குறைந்த அளவு மின்சக்தியை பயன்படுத்தும் என்பதால் சாதனத்தின் பேட்டரி பேக்கப் நேரம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

புகைப்படம்: குயின்ஸ் பல்கலைக்கழகம்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com