

தெலுங்கானா மாநிலம் ராஜண்ணா சிரிசில்லா மாவட்டம், மண்டேபள்ளியின் புறநகர்ப் பகுதியான கே.சி.ஆர் நகர் காலனியில் ஒரு தள்ளுவண்டியில் வந்த பானிபூரியை காலனியைச் சேர்ந்த பலர் சாப்பிட்டனர். அவர்களில், 18 குழந்தைகள் வயிற்று வலி, வாந்தி மற்றும் வயிற்றுப் போக்குடன் கடுமையாக நோய்வாய்ப்பட்டனர். அவர்களது குடும்பத்தினர் நள்ளிரவில் அவர்களை மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் சிலர் நோய்வாய்ப்பட்டதால், பெரியவர்கள் உட்பட பானிபூரியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்தது. தற்போது, 12 குழந்தைகள் மற்றும் 7 பெரியவர்கள் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.