

இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் கோப்பையை வென்றது. அந்த நம்பிக்கையில் பாகிஸ்தான் களம் இறங்குகிறது. அந்த அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக ஹசன் அலி திகழ்கிறார்.
இவர் இந்தியாவிற்கு எதிராக 10 முறை விக்கெட் வீழ்த்தி சந்தோசத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஹசன் அலி கூறுகையில் ‘‘இந்திய அணி வீரர்கள் நெருக்கடியில் இருக்கும்போது அவர்களை விட நாங்கள்தான் டாப். சாம்பியன்ஸ் டிராபியில் அப்படித்தான் அவர்களை தோற்கடித்தோம்.