அரசியலமைப்பை சிதைத்து, ஜனநாயகத்தை அழிக்க மோடி முயற்சிக்கிறார் - கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

பிரதமர் நரேந்திர மோடி அரசியலமைப்பை சிதைத்து, ஜனநாயகத்தை அழிக்க முயற்சித்து வருகிறார் என டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டினார். #ArvindKejriwal #ChandrababuNaidu #Modi
அரசியலமைப்பை சிதைத்து, ஜனநாயகத்தை அழிக்க மோடி  முயற்சிக்கிறார் - கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
Published on

புதுடெல்லி:

விரைவில் பாராளுமன்ற தேர்தல் வருவதையொட்டி பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அணி திரண்டு தங்களது ஒற்றுமையை எடுத்துக்காட்டி வருகிறார்கள்.

இந்நிலையில், டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான கெஜ்ரிவால் இன்று எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார். டெல்லி ஜந்தர் மந்திரில் நடைபெற்ற கூட்டத்தில் மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அரசியலமைப்பை சிதைத்து, ஜனநாயகத்தை அழிக்க முயற்சித்து வருகிறார் என டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டினார். 

இதுதொடர்பாக, கெஜ்ரிவால் பேசுகையில், அரசியலமைப்பை சிதைக்கும் முயற்சியில் பிரதமர் மோடி ஈடுபட்டு வருகிறார். மேலும், ஜனநாயகத்தை அழிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளார்.

டெல்லியில் இருந்து 40 சிபிஐ அதிகாரிகளை அனுப்பி தேர்வு செய்யப்பட்ட அரசுகள் மீது தாக்குதல் நடத்துகிறார். பாகிஸ்தான் பிரதமர் போல் டெல்லி மற்றும் கொல்கத்தாவை கைப்பற்ற கனவு கண்டு வருகிறார் என குற்றம் சாட்டினார்.

இதேபோல், ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு பேசுகையில், நாம் இப்போது அபாயத்தில் உள்ளோம். நாட்டையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டிய நிலையில் உள்ளோம். தற்போது நாம் ஒன்றுபட  வேண்டும். ஏனென்றால், நமக்கு இது கடைசி தேர்தலாகும். நாளை முதல் அவர்கள் எந்த தேர்தலிலும் வெற்றி பெறக்கூடாது என குறிப்பிட்டுள்ளார். #ArvindKejriwal #ChandrababuNaidu #Modi

X

Maalai Malar
www.maalaimalar.com