

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தொடர்ந்து இரண்டாவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்துள்ளர்து. இந்த அரசில் மத்திய நிதி மந்திரியாக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்ற பின்னர் முதல் நிதி நிலை அறிக்கையை ஜூலை மாதம் 5-ம் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார்.
இந்நிலையில், மத்திய நிதி நிலை அறிக்கையில் இடம்பெறும் முக்கிய அம்சங்கள் குறித்து டெல்லியில் பிரபல நிதித்துறை நிபுணர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை ஆலோசனை நடத்தினார்.