

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் பிரவீன் தொகாடியா, இந்திய பிரதமர் மோடிக்கு அயோத்தியில் வந்து தரிசனம் செய்யக்கூட நேரம் இல்லை என்றும், ஆனால் வெளிநாடுகளில் உள்ள மசூதிகளுக்கு செல்ல நேரம் இருப்பதாகவும் சாடியுள்ளார்.
மேலும், அயோத்தி, மதுரா, மற்றும் காசி ஆகிய பகுதிகளில் கோவில் கட்டப்படும் என அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மோடி பல கோடி இந்துக்களுக்கு துரோகம் செய்துவிட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.