சென்னையில் விரைவில் 50 ஏ.சி. பஸ்கள் இயக்கம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னையில் 50 ஏ.சி. பஸ்கள் மிக விரைவில் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.
போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர்
போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர்
Published on

ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தின் கீழ் கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் ரூ.5ஆயிரத்து 200கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. போக்குவரத்து துறையில்தான் அதிக விபத்துக்கள் ஏற்படுகிறது ஆனால் இப்போது எடுக்கப்பட்டுள்ள சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளால் தமிழகத்தில் ஓராண்டில் 24 சதவீத உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளது.

மிக விரைவில் சென்னையில் 50 ஏ.சி. பஸ்கள் இயக்கப்பட உள்ளது. குறைவான தூரம் செல்லக்கூடிய பஸ்களும் விரைவில் ஏ.சி. பஸ்களாக இயக்கப்பட உள்ளது. சுற்றுப்புற சூழல் மாசுபடுவதை கட்டுப்படுத்த வேண்டும் என்ற வகையில் ஜப்பான் நாட்டை சேர்ந்த கே.எப்.டபிள்யூ. என்ற வங்கியின் மூலம் மிகக்குறைந்த வட்டி வீதத்தில் கடனுதவி பெற்று 2 ஆயிரம் மின்சார பஸ்கள் இயக்கப்பட உள்ளது. மொத்தம் 820 மின்சார பஸ்கள் ஓராண்டிற்குள் தமிழகத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், கலெக்டர் அன்பழகன் மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com