மாதவரம் பஸ் நிலையத்தில் மருத்துவ மாணவி தற்கொலை முயற்சி

சென்னை மாதவரம் பஸ் நிலையத்தில் மருத்துவ மாணவி கையை பிளேடால் அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாதவரம் பஸ் நிலையத்தில் மருத்துவ மாணவி தற்கொலை முயற்சி
Published on

மாதவரம்:

ஆந்திரா மாநிலம் நெல்லூர் வெங்கடகிரி நகரைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன். இவரது மகள் கீதா மாதுரி (வயது20).

சென்னையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்த நிலையில் மாணவி கீதாமாதுரி மாதவரம் நவீன பஸ் நிலையத்தில் உள்ள கழிவறையில் கையை அறுத்த நிலையில் மயங்கி விழுந்து கிடந்தார்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மாணவியை மீட்டு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விசாரணையில் கீதா மாதுரி பிளேடால் கையை அறுத்து கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதுபற்றி அவரது பெற்றோருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.

அவர்கள் போலீசாரிடம் கூறும்போது, “கீதாமாதுரிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மனநலம் பாதித்தது. இதனால் அவரை கல்லூரியில் இருந்து சொந்த ஊருக்கு அழைத்து வந்தோம். இந்த நிலையில் அவர் வீட்டில் இருந்து திடீரென மாயமாகி விட்டார்” என்று தெரிவித்தனர்.

இதனால் மாணவி நெல்லூரில் பஸ்சில் சென்னை மாதவரம் பஸ் நிலையத்துக்கு வந்ததும் கையை பிளேடால் அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவர் எதற்காக இந்த முடிவை எடுத்தார் என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com