மயிலாடுதுறை ஒன்றியத்தில் மழை பாதித்த இடங்களில் எம்.எல்.ஏ. ஆய்வு

மயிலாடுதுறை பகுதியில் பெய்யும் மழையால் சம்பாசாகுபடி செய்யப்பட்ட வயல்களில் பயிர்கள் நீரில் முழ்கி உள்ளதா எனவும், தொகுப்பு வீடுகள், சாலைகளையும் ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டார்.
மயிலாடுதுறை ஒன்றியத்தில் மழை பாதித்த இடங்களில் எம்.எல்.ஏ. ஆய்வு
Published on

மயிலாடுதுறை:

மயிலாடுதுறை பகுதியில் பெய்யும் மழையால் சம்பாசாகுபடி செய்யப்பட்ட வயல்களில் பயிர்கள் நீரில் முழ்கி உள்ளதா எனவும், தொகுப்பு வீடுகள், சாலைகளையும் ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டார்.

நேற்று மன்னம்பந்தல், குளிச்சார், கோடங்குடி, செருதீயூர், அகரகீரங்குடி, முட்டம், பட்டமங்கலம் ஊராட்சி போன்ற இடங்களில் மழைநீரால் சேதம் ஏற்பட்டுள்ளதா என்றும் ஆய்வு செய்தார். முட்டம் பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளையும் சேதமடைந்தநிலையில் உள்ள மின்கம்பம் மாற்ற நடவடிக்கை எடுக்க கூறினார். பின்னர் கீழபட்டமங்கலம் பகுதியில் குளத்தின் குறுக்கே செல்லும் மின்கம்பம் சாயும் நிலையில் உள்ளதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவும், அப்பகுதியில் உள்ள 75-க்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகள் உள்ள காலனிகள் பகுதியில் கட்டப்பட்ட வீடுகள் பாழடைந்துள்ளதை அரசு வழங்கும் பசுமை வீடு திட்டத்தில் நிதிவழங்குகிறது. உடனடியாக விண்ணப்பித்து பயன் பெறவேண்டும் என்றார். மேலும் அதே பகுதியில் சுமார் 32 குழந்தைகள் உள்ள அங்கன்வாடி வாடகை இடத்தில் நடத்தி வருகின்றனர். அக்கட்டிடம் விழும் நிலையில் உள்ளது அதில் நடத்த வேண்டாம் எனவும் எம்.எல்.ஏ. நிதியில் இருந்து 7 லட்சத்து 50 ஆயிரம் நிதி வழங்கி நிரந்தர கட்டிடம் கட்டப்படும் என தெரிவித்தார்.

ஆய்வின் போது மயிலாடுதுறை தாசில்தார் காந்திமதி, வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலெட்சுமி மற்றும் சேதுராமன், ராமதாஸ், செல்வநாயகம், முட்டம் குமார், ஈழவேந்தன் ஆகியோர் உடன் இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com