டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் துப்பாக்கி குண்டுகளுடன் மர்ம நபர் கைது

டெல்லி மெட்ரொ ரெயில் நிலையத்தில் துப்பாக்கி குண்டுகள் வைத்திருந்த ஒரு நபரை மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on

புதுடெல்லி:

பீகார் மாநிலத்தின் சம்பரான் மாவட்டத்தை சேர்ந்தவர் ரவிந்திர சிங். இன்று காலை டெல்லியில் உள்ள ஆனந்த் விகார் மெட்ரோ ரெயில் நிலையத்தில் துப்பாக்கி குண்டுகள் வைத்திருந்த குற்றத்திற்காக இவர் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், “அவரிடமிருந்து 8 மி.மி காலிப்ரே வகை துப்பாக்கி குண்டுகள் கைப்பற்றப்பட்டன. ஆனால் அவரிடம் இதற்கான முறையான ஆவணங்கள் ஏதும் இல்லை. ஆயுத தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com