மாமல்லபுரம் அருகே மனைவியின் கள்ளக்காதலனை குத்தி கொன்ற கணவர் கோர்ட்டில் சரண்

மாமல்லபுரம் அருகே மனைவியின் கள்ளக்காதலனை குத்தி கொன்ற கணவர் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
மாமல்லபுரம் அருகே மனைவியின் கள்ளக்காதலனை குத்தி கொன்ற கணவர் கோர்ட்டில் சரண்
Published on

மாமல்லபுரம்:

ஆந்திராவைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி மாலதி. இருவரும் சென்னை கொட்டிவாக்கத்தில் தங்கியிருந்து கட்டிட வேலை பணிகள் செய்து வந்தனர்.

அப்போது அப்பகுதி ஆட்டோ டிரைவர் ஜெகன் என்பவருடன் மாலதிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

இதை அறிந்த நாகராஜ் கடந்த 1-ந் தேதி தனது நண்பர் மாரிமுத்துவுடன் சேர்ந்து கள் விருந்து எனக்கூறி ஜெகனை மாமல்லபுரம் அடுத்த தெற்குபட்டு சவுக்கு தோப்புக்கு அழைத்து சென்று கத்தியால் குத்தி கொலை செய்தார்.

இந்த வழக்கில் மாமல்லபுரம் போலீசார் மாரிமுத்துவை கைது செய்தனர். ஆந்திராவுக்கு தப்பி ஓடிய நாகராஜை போலீசார் தேடி வந்த நிலையில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com