ரூ.1 கோடி கேட்டு மாணவரை கடத்திய வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

காட்பாடியில் ரூ.1 கோடி கேட்டு மாணவரை கடத்திய வழக்கில் பதுங்கியிருந்த முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
ரூ.1 கோடி கேட்டு மாணவரை கடத்திய வழக்கில் முக்கிய குற்றவாளி கைது
Published on

வேலூர்:

காட்பாடி ராதாகிருஷ்ணன் நகரைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மகன் டிஜோரமேஷ் (வயது 22). கல்லூரி மாணவரான இவரை கடந்த ஆகஸ்டு மாதம் 16-ந் தேதி ஒரு கும்பல் ரூ.1 கோடி கேட்டு கடத்தியது. பின்னர் மாணவரை அந்த கும்பல் விடுவித்தது.

இந்த நிலையில் டிஜோரமேஷின் வீட்டில் கடந்த 1-ந் தேதி மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு தப்பிச்சென்றனர்.

அதில், 4 மோட்டார் சைக்கிள்கள், வீட்டில் இருந்த ஏ.சி.எந்திரம் மற்றும் பொருட்கள் எரிந்து நாசமாயின. இந்த இரு சம்பவம் குறித்து விருதம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து காட்பாடி தாராபடவேட்டை சேர்ந்த பாலா (23), கஞ்சாலூரைச் சேர்ந்த ரகீம் (21), காட்பாடி பாரதிநகரை சேர்ந்த சீனிவாசன் (21) ஆகியோரை கைது செய்தனர். மேலும் மாணவர் கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியான மன்சூரை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில், காட்பாடி பகுதியில் பதுங்கியிருந்த மன்சூரை (34) போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது. மாணவர் கடத்தலில் பிரபல ரவுடி ஜானிக்கு தொடர்பு உள்ளதா? அவர் எங்கு உள்ளார்? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com