மதுரை புதூர் பகுதியில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள காரான் ஊராட்சி தலைத்தோப்பு பகுதியை சேர்ந்த முனியராஜ் என்பவரின் மகன் காளிதாஸ் (வயது 24). இவரும், அதே பகுதியை சேர்ந்த பிரவீனா(21) என்ற பெண்ணும் கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.