கார்த்தி சிதம்பரம் மீது லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தது ஏன்? - சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. தகவல்

கார்த்தி சிதம்பரம் வெளிநாட்டுக்கு செல்வதை தடுக்கும் வகையில், லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது குறித்து சி.பி.ஐ. இன்று சுப்ரீம் கோர்ட்டில் விளக்கம் அளித்தது.
கார்த்தி சிதம்பரம் மீது லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தது ஏன்? - சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. தகவல்
Published on

ஐ.என்.எஸ். மீடியாவுக்கு நிதித்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியதில் முறைகேடாக பணம் பெற்றதாக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக அவரது வீட்டில் சோதைனயும் நடத்தப்பட்டது.

இது குறித்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு கார்த்தி சிதம்பரத்துக்கு பலமுறை சம்மன் அனுப்பப்பட்டது. அவர் விசாரணைக்கு ஆஜராகாததை தொடர்ந்து அவரை தேடப்படும் நபராக மத்திய அரசு அறிவித்து, லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com