

முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மரணம் என இலங்கை வெளியுறவு மந்திரி பெயரில் உள்ள போலி டுவிட்டர் கணக்கில் மர்ம நபர்கள் விஷமமாக பதிவு செய்துள்ளனர்.
இலங்கை வெளியுறவு மந்திரியாக பொறுப்பு வகிப்பவர் ரவி கருனநாயகே, இவர் பெயரில் டுவிட்டரில் 3-க்கும் மேற்பட்ட போலி கணக்குகள் உள்ளன. இந்நிலையில், அவரது பெயரில் உள்ள போலி கணக்கில் இருந்து இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மரணமடைந்ததாக டுவிட் செய்யப்பட்டிருந்தது.