

11-வது வருடத்திற்கான லீக் தொடருக்கான பிசிசிஐ பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. குறிப்பாக வீரர்களின் ஏலங்களுக்கான மொத்த தொகை 60 கோடி ரூபாயில் இருந்து உயர்த்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ஒவ்வொரு அணியும் தங்களை கட்டமைப்பத்தில் கவனம் செலுத்தி வருகிறது. இந்த வகையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் பிராட் ஹாட்ஜ்-ஐ தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.