செய்திகள்
கவுன்டி கிரிக்கெட்டில் 2017-ல் மட்டும் 8 சதங்கள் விளாசி சங்ககரா அசத்தல்
இலங்கை அணியின் முன்னாள் நடசத்திர வீரரான சங்ககரா 2017-ல் மட்டும் இங்கிலாந்து கவுன்டி போட்டியில் 8 சதங்கள் விளாசி சாதனைப் படைத்துள்ளார்.
ஆனால் இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி போட்டியில் 2017-ம் ஆண்டு வரை விளையாடுவேன் என்று அறிவித்தார். அதன்படி இந்த வருடத்துடன் சங்ககராவின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது.
சங்ககரா இங்கிலாந்தின் சுர்ரே அணிக்காக விளையாடி வருகிறார். இந்த வருடம் அவருக்கு பொற்காலம் என்றே கூறலாம். இதற்கு முன்பு ஐந்து இன்னிங்சில் தொடர்ந்து சதம் அடித்து சாதனைப் படைத்தார்.
தற்போது தொடர்ந்து மூன்று சதங்கள் விளாசியுள்ளார். சுர்ரே - சோமர்செட் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்றுமுன்தினம் தொடங்கியது. 2-வது நாள் ஆட்ட முடிவில் சுர்ரே அணி 6 விக்கெட் இழப்பிற்கு 328 ரன்கள் சேர்த்திருந்தது.

