கீழ்வேளூர் அருகே 4 கூரை வீடுகள் எரிந்து சாம்பல்

கீழ்வேளூர் அருகே 4 கூரை வீடுகள் எரிந்து சாம்பலானது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடு தீ விபத்து
வீடு தீ விபத்து
Published on

நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த கொளப்பாடு அருகே உள்ள முத்தரசபுரத்தை சேர்ந்த சிலர் கொளப்பாடு ஊராட்சிக்குட்பட்ட ஆண்டிபாளையம் சோழவித்தயாறு கரைகளில் நேற்று காலை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதிகளில் இருந்த மூங்கில் மரங்கள், கருவேல மரங்களை தீவைத்து கொளுத்தினர். அப்போது காற்று வேகமாக வீசியதால் அந்த பகுதியில் உள்ள ஜெயபிரகாஷ், நாகரத்தினம், பாஸ்கர், கற்பகம் ஆகிய 4 பேரின் கூரை வீடுகளுக்கும் தீப்பரவி கொழுந்து விட்டு எரிந்தது.

இந்த தீவிபத்தில் வீடுகளில் இருந்த அனைத்து வீட்டு உபயோக பொருட்களும் எரிந்து சேதம் அடைந்தன. இதன்சேத மதிப்பு பல லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com