இவர்களை விட்டால் யார் இருக்கா?: பீட்டர்சன் கவலை

ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் ஓய்வு பெற்ற பிறகு, இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்களா? என கெவின் பீட்டர்சன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கெவின் பீட்டர்சன்
கெவின் பீட்டர்சன்
Published on

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் தலைசிறந்த பந்து வீச்சாளர்களாக உள்ளனர். இருவரும் இணைந்து சுமார் 10 வருடத்திற்கு மேல் பணியாற்றி வருகின்றனர். இருவருக்கும் 30 வயதிற்கு மேல் ஆகியது. ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் ஆஷஸ் தொடருக்குப்பின் ஓய்வு குறித்து இவரும் முடிவு எடுக்கலாம்.

இருவரும் ஓய்வு பெற்றால் அதன்பின் அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் என்று யார் இருக்கிறார்கன் என முன்னாள் பேட்ஸ்மேன் கெவின் பீட்டர்சன் தனது கவலையை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கெவின் பீட்டர்சன் கூறுகையில் ‘‘ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் அணியில் இருந்து சென்ற பிறகு, இங்கிலாந்து டெஸ்ட் அணி குறித்து நான் கவலைப்படுகிறேன். தற்போது அவர்கள் கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி விளிம்பில் உள்ளனர். அவர்கள் சென்ற பிறகு அந்த இடத்தை நிரப்ப மிகமிகப் பெரிய அளவில் இடைவெளி ஏற்படும். இங்கிலாந்து அணியிடம் பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்களா?’’ எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com