கேரளாவில் போலீஸ்காரருடன் நெருக்கமாக இருக்கும் பெண் போலீஸ் - புகைப்படத்தால் பரபரப்பு

கேரளாவில் பெண் போலீஸ் ஒருவர் போலீஸ்காரருடன் நெருக்கமாக இருக்கும் காட்சி செல்போன் மூலம் வாட்ஸ்-அப்பில் பரவியதால் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவில் போலீஸ்காரருடன் நெருக்கமாக இருக்கும் பெண் போலீஸ் - புகைப்படத்தால் பரபரப்பு
Published on

திருவனந்தபுரம்:

செல்போனில் படம் பிடிக்கப்படும் அந்தரங்க காட்சிகள் வெட்டவெளிச்சமாகி பரபரப்பை ஏற்படுத்தும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.

தற்போது கேரளாவில் பெண் போலீஸ் ஒருவர் போலீஸ்காரருடன் நெருக்கமாக இருக்கும் காட்சி செல்போன் மூலம் வாட்ஸ்-அப்பில் பரவியதால் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த காட்சியை அந்த பெண் போலீஸ், தான் இணைந்துள்ள வாட்ஸ்-அப் குரூப்பில் உள்ள தனக்கு நெருக்கமானவர்களுக்கு அனுப்பி உள்ளார். தானும் அந்த போலீஸ்காரரும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் அதில் அவர் கூறியிருந்தார். ஆனால் அந்த காட்சியை யாரோ மற்ற வாட்ஸ்-அப் குரூப்களிலும் பரவவிட்டதால் தற்போது அது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.

இதைதொடர்ந்து இந்த விவகாரம் கேரள உயர் போலீஸ் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவர்கள் இதுதொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டனர். விசாரணையில் அந்த பெண் போலீஸ்காரர் மாலூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றுவது தெரிய வந்தது.

இதைதொடர்ந்து அவரை கேரளாவில் உள்ள வேறு போலீஸ் நிலையத்திற்கு மாற்றி உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்கிடையில் இந்த காட்சியை பரப்பியவர்கள் பற்றியும் விசாரணை நடந்து வருகிறது. அந்த வாட்ஸ்-அப் குரூப்பில் உள்ளவர்களின் விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது. போலீசாரின் வாட்ஸ்-அப் குரூப்பில் உள்ள ஒரு போலீஸ்காரர் தான் இந்த காட்சியை பரப்பியவர் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர் போலீஸ் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com