சிறுமி கற்பழிப்பு வழக்கில் பாதிரியாருக்கு 60 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

கேரளா மாநிலம் கண்ணூரில் சிறுமியை கற்பழித்த வழக்கில் பாதிரியார் ராபின் வடக்கும்சேரி என்பவருக்கு இன்று 60 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. #Keralapriest #RobinVadakkumchery
சிறுமி கற்பழிப்பு வழக்கில் பாதிரியாருக்கு 60 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை
Published on

கேரளா மாநிலத்தில் உள்ள கண்ணூரில் உள்ள ஒரு  கத்தோலிக்க தேவாலயத்தில் ராபின் வடக்கும்சேரி (51)  என்பவர் பாதிரியாராக இருந்து வந்துள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் 16 வயது சிறுமியை பாதிரியார் கொடூரமாக கற்பழித்துள்ளார். சில மாதங்களில் சிறுமி தனியார் மருத்துவமனை ஒன்றில் குழந்தை பெற்றார்.

பின்னர்  போலீசாருக்கு அந்த சிறுமி கடிதம் ஒன்றை எழுதி தனது நிலையை விளக்கியுள்ளார்.  இதை தொடர்ந்தே இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. பின்னர், சிறுமி கற்பழிப்பு தொடர்பாக ராபின் வடக்கும்சேரியை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவத்தை மூடி மறைக்க முயன்றதாக 5 பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகள் மீது புகார் கூறப்பட்ட  நிலையில் சில பாதிரியார்களும் கன்னியாஸ்திரிகளும்  தாமாக முன்வந்து கண்ணூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com