காவேரிப்பாக்கத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து விவசாயி பலி

காவேரிப்பாக்கத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து பலி
விபத்து பலி
Published on

காவேரிப்பாக்கம்:

வாலாஜா தாலுகா படியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் விநாயகம் (வயது 53), விவசாயி. இவர் கடந்த 8-ந் தேதியன்று மனைவியை அழைத்து கொண்டு படியம்பாக்கத்தில் இருந்து காவேரிப்பாக்கம் நோக்கி மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அப்போது காவேரிப்பாக்கம் ஏரிக்கரை வழியாக வந்து கொண்டிருந்தபோது நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதில் விநாயகத்திற்கு படுகாயம் ஏற்பட்டது. அவரது மனைவிக்கு காயமின்றி தப்பினார். விநாயகம் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்க சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து விநாயகம் மகள் ஹேமப்பிரியா காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com