search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    மூச்சு ரகசியம்
    X

    மூச்சு ரகசியம்

    • மூச்சுப்பயிற்சி செய்யும் பொழுது 12 அங்குலம் காற்றை உள்ளிழுத்து 8 அங்குலம் நிறுத்தி 4 அங்குலம் வெளிவிட வேண்டும்.
    • சனிக்கிழமை மட்டும் அதிகாலை 4 மணி முதல் இரவு 12 மணி வரை சூரிய கலையில் சுவாசம் ஓட வேண்டும்.

    மூச்சு ஒருநாழிகைக்கு 360 சுவாசம்

    ஒருநாளைக்கு 21600 சுவாசம்

    மூச்சுப்பயிற்சி செய்யும் பொழுது 12 அங்குலம் காற்றை உள்ளிழுத்து 8 அங்குலம் நிறுத்தி 4 அங்குலம் வெளிவிட வேண்டும். இதே முறையில் ஒருவனுக்கு சுவாசம் தொடர்ந்து ஓடினால் அவன் 120 வருடங்கள் வாழ்வான். இவ்வாறு சுவாசம் குறைய ஆயுளும் கூடும். சுவாசம் அதிகரிக்க அதிகரிக்க ஆயுள் குறையும்.

    நம்முள் சுவாசம் நடக்கும் அளவு:

    அமர்ந்திக்கும்போது 12 அங்குலம்

    நடக்கும்போது 16 அங்குலம்

    ஓடும்போது 25 அங்குலம்

    உறங்கும்போது 36 அங்குலம்

    உடலுறவு கொள்ளும்போது 64 அங்குலம்

    சுவாசம் குறைத்தால் ஏற்படும் நன்மைகள்:

    11 அங்குலமாக குறைந்தால் உலக இச்சை நீங்கும்.

    10 அங்குலமாக குறைந்தால் ஞானம் உண்டாகும்.

    9 அங்குலமாக குறைந்தால் விவேகி ஆவான்.

    8 அங்குலமாக குறைந்தால் தூர திருஷ்டி காண்பான்.

    7 அங்குலமாக குறைந்தால் ஆறு சாஸ்திரங்கள் அறிவான்.

    6 அங்குலமாக குறைந்தால் ஆகாய நிலை அறிவான்.

    5 அங்குலமாக குறைந்தால் காயசித்து உண்டாகும்.

    4 அங்குலமாக குறைந்தால் அட்டமாசித்து உண்டாகும்.

    3 அங்குலமாக குறைந்தால் நவகண்ட சங்சாரம் உண்டாகும்.

    2 அங்குலமாக குறைந்தால் கூடுவிட்டு கூடுபாய்தல்..

    1 அங்குலமாக குறைந்தால் ஆன்ம தரிசனம்.

    உதித்த இடத்திலேயே நிலைத்தால் சமாதி நிலை. அன்ன பானம் நீங்கும்.

    எந்தெந்த நாட்கள் எந்த சுவாசம் ஓட வேண்டும் என்பதைப் பற்றி காண்போம்.

    ஞாயிறு, செவ்வாய் , சனி - இம்மூன்று நாட்களிலும் சூரியகலை ஓட வேண்டும்.

    வெள்ளி, திங்கள் , புதன் - இம் மூன்று நாட்களிலும் சந்திரகலை ஓட வேண்டும்.

    வியாழக்கிழமை - பூர்வபட்சம் (வளர்பிறை) - சந்திர கலை ஓட வேண்டும்.

    அமரபட்சம் (தேய்பிறை) - சூரிய கலை ஓட வேண்டும்.

    இம்முறையில், அதிகாலை 4 மணிக்கு சுவாசம் நடக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து நடந்தால் காரியங்கள் அனைத்தும் சித்தியாகும்.

    சனிக்கிழமை மட்டும் அதிகாலை 4 மணி முதல் இரவு 12 மணி வரை சூரிய கலையில் சுவாசம் ஓட வேண்டும்.

    - சிவசங்கர்

    Next Story
    ×