

ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் நகரில் இன்று நடைபெற்ற புதுப்பிக்கப்பட்ட ஐகோர்ட் கட்டிடத்தின் திறப்பு விழாவில் பங்கேற்று பேசிய சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஷரத் அரவிந்த் பாப்டே, ஐதராபாத் பெண் டாக்டர் கற்பழிப்பு வழக்கில் பிடிபட்ட குற்றவாளிகள் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலோட்டமாக சில கருத்துகளை தெரிவித்தார்.
நாட்டில் சமீபகாலமாக நடந்த சில சம்பவங்கள் பழைய விவாதத்துக்கு புதுத்தெம்பை ஊட்டியுள்ளது.கிரிமினல் வழக்குகளை முடித்து வைப்பதில் ஏற்படும் தொய்வு தொடர்பான மனப்பாங்கு மாற்றப்பட வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.