

5-ம் ஆண்டு சர்வதேச யோகா தினத்தையொட்டி, இந்திய கடற்படை சார்பில் அந்தமான் நிக்கோபார் தீவில் நேற்றும் இன்றும் சிறப்பு யோகா வகுப்புகள் நடைபெற்றன. இதில் இந்திய தரைப்படை, கடற்படை, விமானப் படை மற்றும் கடலோர காவல் படை வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்கள் உட்பட சுமார் 1000 பேர் பங்கேற்றனர்.
அவர்களுக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவால் பயிற்றுவிக்கப்பட்ட ஹடயோகா ஆசிரியர்கள் மூலம் உபயோகா கற்றுக்கொடுக்கப்பட்டது. இது மூட்டுகள், தசைகள் மற்றும் ஆற்றல் மையங்களை செயல்படுத்துகின்ற எளிய மற்றும் சக்திவாய்ந்த யோக பயிற்சி ஆகும்.
அந்தமானில் உள்ள இந்திய கடற்படையின் மிதக்கும் துறைமுகத்தில் யோகா தின நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தலைமையகத்தின் தலைமை தளபதி, கடற்படை உதவி தலைவர் பிமல் வர்மா பங்கேற்றனர்.
அந்தமானில் யோகா பயிற்சி அளித்தது தொடர்பாக சத்குரு கூறியதாவது:-
இவ்வாறு அவர் கூறினார்.
ஈஷா யோகா மையம் சார்பில் சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, உலகம் முழுவதும் இலவச யோகா வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, இந்தாண்டு இந்தியா, அமெரிக்கா, சீனா, சிங்கப்பூர், மலேசியா, ரஷ்யா, ஆப்பிரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் சுமார் 1,500 இடங்களில் இலவச யோகா வகுப்புகள் நடத்தப்பட்டன. குறிப்பாக, தமிழகத்தில் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் யோகா வகுப்புகள் நடைபெற்றன.
இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இந்திய ராணுவ வீரர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், பொதுமக்கள் என பல தரப்பைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். அவர்களுக்கு சத்குருவால் பயிற்றுவிக்கப்பட்ட யோகா ஆசிரியர்கள் மூலம் ‘உபயோகா’ என்ற யோகா பயிற்சி சொல்லிக் கொடுக்கப்பட்டது.