அயர்லாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட சர்வதேச கிரிக்கெட் கமிட்டி கடந்த வருடம் அனுமதி அளித்தது. அதனடிப்படையில் வரலாற்று சிறப்புமிக்க அறிமுக டெஸ்டில் அயர்லாந்து பாகிஸ்தான் உடன் விளையாட முடிவு செய்தது.

அந்த டெஸ்ட் இன்று டப்ளினில் தொடங்குவதாக இருந்தது. ஆனால் மழைக் காரணமாக போட்டி இன்று தொடங்கவில்லை. முதல்நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் மழையினால் ரத்து செய்யப்பட்டது. வரலாற்று சிறப்புமிக்க டெஸ்டிற்காக அயர்லாந்து இன்னும் ஒருநாள் (நாளை) காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.